கொழும்பின் முன்னணி ஆண்கள் பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் ஆறரை வயது மாணவன் ஒருவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியமை, மற்றும் அதற்கு உதவி புரிந்தமை ஆகிய குற்றங்களுக்காக, அதே பாடசாலையில் கல்விபயின்ற மாணவர்கள் இருவருக்கும் 10 மற்றும் 9 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி கு இன்று தீர்ப்பளித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர் தரத்தில் கல்வி பயின்ற குறித்த இருவரும் பாடசாலை ரக்பி குழாத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.
இதன்போது, பட்மின்டன் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவனை குற்றவாளிகளான இருவரும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை நீதிமன்றத்தில் நிரூபணமாகியுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 2 இலட்சம் ரூபா நட்ட ஈட்டை வழங்குமாறும் குற்றவாளிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், இரண்டு குற்றவாளிகளுக்கும் தலா 20,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நீதிமன்றம் விதித்த அபாராதத்தை குற்றவாளிகள் செலுத்தத் தவறின், அவர்களுக்கு மேலும் 43 மாதங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கபப்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.