சென்னை அணியின் தலைவரான டோனி தனக்கு வயதாகிவிட்டது என்று நினைப்பதாக டெல்லி வெற்றிக்கு பின் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்று முன் தினம், சென்னை-டெல்லி அணிகள் மோதிய ஆட்டத்தில், சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டி டோனிக்கு 200-வது போட்டி என்பதால், அவரிடம் இது குறித்து கேட்கப்பட்டது, அதற்கு டோனி 2008-ஆம் ஆண்டு முதல் இன்று வரை சென்னை அணிக்காக விளையாடி வருகிறேன்.
இதனால் எனக்கு மிகவும் வயதாகிவிட்டது என்று நினைக்கிறேன். தென் ஆப்ரிக்கா, துபாய் என வெளியூர்களிலும் விளையாடி சென்னையிலும் விளையாடி வெவ்வேறு அனுபவங்களை பார்த்து விட்டேன்.
2011-ஆம் ஆண்டுவரை சென்னை மைதானம் மிகவும் சிறப்பாக இருந்தது. அதன் பின்னர் மைதானம் சீரமைக்க போய் அதன் தன்மையை இழந்துவிட்டது.
அதில் இருந்தே மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப நாங்கள் மாற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. தற்போது மும்பை மைதானத்தை தங்களது ஹோம் மைதானமாக விளையாடி வருகிறோம்.
மைதானம் எங்களுக்கு ஹோம் மைதானமாக அமையும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. மும்பை மைதானம் எப்பொழுதும் சிறப்பாக இருக்கும்.
பந்து வீச்சுக்கும் பல சாதகமான மைதானமாக மும்பை மைதானம் எப்பொழுதுமே இருந்து கொண்டிருக்கும். எனினும் அந்தந்த நாள் தான் மைதானத்தில் தட்ப நிலை குறித்து முடிவெடுக்கும் இன்று இறுதியாக டோனி கூறி முடித்தார்.