மட்டக்களப்பு மருத்துவமனையில் 25 வயதுடைய மயூரன் 2ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இளைஞன் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு பழுகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞனே மருத்துவமனையிஒல் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இளைஞனின் தற்கொலை தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.