கட்டிட பெண் தொழிலாளி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நாகை மாவட்டம் நாகூர் தோப்பு அருகே உள்ள பகுதியை சேர்ந்த கட்டிட பெண் தொழிலாளி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
கணவரை இழந்த இவர் நாகத்தோப்பு அருகே கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது சகோதரியின் வீட்டில் தங்கியுள்ளார்.
நேற்று இரவு அந்த பெண் சகோதரியின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள் சிலர் பெண்ணை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த கூலிப் பணத்தை பறித்துக் கொண்டு அப்பகுதியில் இருந்த கோயிலுக்கு இழுத்துச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி வீட்டிற்கும் சென்று அந்த இளைஞர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்வோம் என மிரட்டியுள்ளனர்
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.