இன்று நள்ளிரவு முதல் சாதாரண தரப் பரீட்சைகள் முடிவடையும் எதிர்வரும் மார்ச் 10 ஆம்திகதிவரை பரீட்ச்சார்த்திகளுக்காக பிரத்தியேக வகுப்புகளை ஏற்பாடு செய்தல் மற்றும் நடத்துதல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு பரீட்சை தொடர்பான கருத்தரங்கு, பயிற்சிப்பட்டறை, மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் என்பனவும் தடைசெய்யப்பட்டுள்ளது.
பரீட்சை வினாக்கள் தொடர்பான அல்லது அது சம்பந்தப்பட்ட சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகளை இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பிரசுரித்தல் என்பவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை மீறுபவர்கள் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது 1911 என்ற துரித எண்ணுக்கோ அறிவிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.