நாட்டில் கொவிட்-19 தொற்றினால் நேற்று மேலும் ஐந்து மரணங்கள் பதிவாகின.
இதன்படி நாட்டில் கொவிட்-19 மரணங்களில் மொத்த எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூனகஹ பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர், குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்தார்.
கொவிட்-19 தொற்றுடன், தீவிர நீரிழிவு மற்றும் தீவிர சிறுநீரக நோய் நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்தார்.
கொவிட் நியூமோனியா நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு 12 ஐ சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவர், கடந்த 20 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது உயிரிழந்தார்.
கொவிட் தொற்றுடன், குருதி நஞ்சானமை, சிறுநீர் வழியில் ஏற்பட்ட தீவிர தொற்று நிலையே அவரின் மரணத்திற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவர், கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் இருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.
கொவிட் நியூமோனியா மற்றும் தீவிரமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமை அவரின் மரணத்திற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 13 ஐ சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவர், கடந்த 20 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்தார்.
கொவிட் நியூமோனியா மற்றும் தீவிர நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்தம் என்பன அவரின் மரணத்திற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்தாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.