நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 448 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 81 ஆயிரத்து 769 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 84 ஆயிரத்து 960 ஆக காணப்படுகின்றது.
இதில் 2 ஆயிரத்து 698 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 493 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.