கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் இருக்கின்றனர். கொழும்பில் அவர்களுக்கு வீடு உள்ளது. யாழ்ப்பாணத்தில் அவர்களுக்கு வீடு உள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அதிக பணம் உள்ளது. ஆனால் அவர்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களிடம் என்ன இருக்கின்றது என இராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, வடக்கில், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தால் தமிழ் மக்கள் மீது தாக்குதல்கள் நடத்துவார், அதிகளவிலான இராணுவத்தினரை வடக்கில் நிலைநிறுத்துவார் என பல பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது என்ன நடந்திருக்கின்றது.
கோட்டாபய ராஜபக்ச நல்ல ஒரு மனிதன். கோட்டாபய ராஜபக்சவினால்தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு வழிவகுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.