கண்டி மாவட்டத்தில் மொத்தம் 7 கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அவர்கள் அனைவரும் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் அவர் கூறினார்.
மேலும் கண்டி வைத்தியசாலையில் தற்போது 55 தீவிர சிகிச்சை பிரிவுகளே உள்ள நிலையில் அவற்றினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.