உக்ரைனில் 19 வயது திருநங்கை டேட்டிங் செயலி மூலம் நட்பான நபரை சந்திக்க சென்ற நிலையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
19 வயதான திருநங்கை ஒருவர் டேட்டிங் செயலி மூலம் 17 வயது நபருடன் நட்பாகியுள்ளார்.
இதையடுத்து திருநங்கை அவனை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
அப்போது அந்த சிறுவன் திருநங்கைக்கு மது வாங்கி கொடுத்துள்ளான், பின்னர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
அந்த சமயத்தில் சிறுவனின் மூன்று ஆண் நண்பர்கள் மற்றும் ஒரு தோழி அங்கு வந்த நிலையில் அனைவரும் சேர்ந்து திருநங்கையை துஷ்பிரயோகம் செய்தனர்.
பின்னர் திருநங்கை அடித்து துன்புறுத்தப்பட்டதோடு நிர்வாணப்படுத்தபப்ட்டார். இதோடு அவரிடம் இருந்த பணத்தை அனைவரும் சேர்ந்து திருடி கொண்டனர்.
இதோடு திருநங்கையை இரத்தம் வடிய நிர்வாண நிலையில் சாலையில் நடக்க வைத்து பின்னாடி காரில் சென்றுள்ளது அந்த கும்பல்.
தற்போது திருநங்கை மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரின் மூக்கு உடைந்துள்ள நிலையில் உடைந்த மூக்குக்கு அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது, ஆனால் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த கொடுமையான சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.