தைவானில் பட்டம் விடும் திருவிழாவின்போது பட்டத்தின் வாலில் சிக்கிய சிறுமி ஒருத்தி வானில் சுழற்றியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று காண்போரை பதற அடித்தது. தைவானின் Nanliao கடற்கரையில், புகழ்பெற்ற பட்டம் விடும் திருவிழா நடந்துகொண்டிருந்தது.
அப்போது எப்படியோ ஒரு மூன்று வயது சிறுமி பட்டம் ஒன்றின் வாலில் சிக்கியுள்ளாள்.
பட்டம் பறக்க, பட்டத்தின் வால் மேலெழும்ப, சுமார் 100 அடி உயரத்திற்கு வீசியெறியப்பட்டாள் அந்த சிறுமி.
பயந்து அலறினாலும், அவள் அந்த பட்டத்தை விடவில்லை. சிறுமியை ஒரு சுழற்று சுழற்றி வீசியபின் பட்டத்தின் வால் தரையை நோக்கி வர, காத்திருந்த மக்கள் அவளைப் பிடித்துக்கொண்டனர்.



















