நாட்டில் நேற்று (29) மேலும் 8 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்மூலம் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துள்ளது. மரணங்களின் விபரம் வருமாறு-
கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த, 65 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இரணவில சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் 27ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான பெண் ஒருவர், பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் 27ஆம் திகத நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலி பிரதேசத்தைச் சேர்ந்த, 58 வயதான ஆண் ஒருவர், கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (28) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் உக்கிர மாரடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த, 90 வயதான பெண் ஒருவர், களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் ஜனவரி 24ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர கொவிட்-19 காரணமாக, மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டமை காரணமான இறப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த, 80 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (28) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, இருதய செயலிழப்பு, உக்கிர நீரிழிவு, அதிக இரத்த அழுத்த நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த, 43 வயதான பெண் ஒருவர், கொத்தலாவல பாதுகாப்புப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (29) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் குருதி விஷமடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது 12 பிரதேசத்தைச் சேர்ந்த, 63 வயதான ஆண் ஒருவர், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (29) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவினால் ஏற்பட்ட அதிர்ச்சி, கொவிட்-19 நிமோனியா மற்றும் இருதய நோய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த, 66 வயதான பெண் ஒருவர், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (29) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, குருதி விஷமடைவினால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் இருதய நோய் என அறிவிக்கப்பட்டுள்ளது.