பாகிஸ்தானில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் பலியானதாக அந்நாட்டு இராணுவம் மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தாக்குதல் பாகிஸ்தானின் மிர் அலி நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் ஊடகம் செய்தி வெளியிடுகையில்,
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் உடனான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மிர் அலி நகரில் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பதாக அந்நாட்டு இராணுவத்தினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியை சுற்றி வளைத்த இராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் குடியிருப்பு வளாகத்திற்குள் பதுங்கி இருந்த 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது இராணுவப் படையைச் சேர்ந்த 2 பேர் பலியனார்கள்.
பாகிஸ்தான் இராணுவம் சமீப காலமாக வடக்கு வஜீரிஸ்தானில் தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.




















