வடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில் 51 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்று 236 பேரின் பி.சீ.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் அவற்றில் 52 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆசிரியை ஒருவருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கிடையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட 463 பரிசோதனைகளில் 9 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.