மன்னார் மாவட்டத்தில் உள்ள சில சோதனை சாவடிகளில் உள்ள இராணுவத்தினர், சோதனை என்கின்ற பெயரில் விற்பனை பொருட்களை ஏற்றி வருகின்ற வாகனங்களை இடைமறித்து பொருட்களை அடாவடியாக எடுத்து கொள்வதாக வியாபாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக வருபவர்களும் விற்பனைக்காக செல்பவர்களுமே இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
தொடர்சியாக மன்னார் பிரதான பாலப்பகுதியிலும் வங்காளை ,குஞ்சுக்குளம் பகுதியிலும் உள்ள சில சோதனை சாவடிகளில் உள்ள இராணுவத்தினரே இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளனர்.
விற்பனைக்காக வரும் போதும் விற்பனை முடிந்து செல்லும் போதும் இவ்வாறான செயற்பாடுகளில் இராணுவத்தினர் ஈடுபடுவதாகவும் தங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இராணுவத்தினர் எடுக்கும் பொருட்களை விருப்பமின்றி அவர்களிடமே கொடுத்து விட்டு வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
எனவே இது தொடார்பில் சம்பந்தப்பட்டவர்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு பாதிக்கப்பட்ட சிறு தொழில் விற்பனை முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.