இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் திகதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாளை (மார்ச் 30) மாலை புதுச்சேரி ஏஎப்டி பஞ்சாலைத் திடலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி உறையாற்றவுள்ளார்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது, 144 பிரிவின் கீழ் புதுச்சேரியில் இன்றும், நாளையும் விமானங்கள் பறக்க தடை அரசு தடை விதித்துள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளது. புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 என்.ஆர்.காங்கிரஸ் (16), பாஜக (9), அதிமுக (5) தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாளை புதுச்சேரியில் மோடி இரண்டாவது முறையாக பிரசாரம் செய்வுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி 25ம் திகதி புதுச்சேரிக்கு வருகை தந்த மோடி மத்திய அரசு நிதியளிக்கும் பல திட்டங்களை தொடங்கி வைத்தார்.