கடந்த காலத்தை பற்றி பேசிக் கொண்டு தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எந்த அரசியல் கட்சிக்கும் மாற்ற முடியாத வலுவான தேசிய கொள்கையை உருவாக்குவதே கொரோனாவுக்கு பின்னரான நாட்டை உருவாக்கும் ஒரே வழியாக இருக்கும் எனவும் ரணில் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக்கொண்டதால், பதவிகளை இழந்த உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு பதிலாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 72 பேருக்கு நியமனங்களை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ரணில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இதனை கூறியுள்ளார்.
இதன் போது ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான நமது நாடு என்ற பத்திரிகையின் இணையத்தளமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.