இந்த துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இது, பசியைத் தூண்டும், வாய்க்கசப்பு நீக்கும். உள்ளுறுப்புகளை சீராக்கி, ஜீரண சக்தியைத் தூண்டும்.
தேவையான பொருட்கள்
சீரகம் – கால் கப்
இஞ்சி – சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்)
சின்ன வெங்காயம் – 5
புளி – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 5
எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாயை போட்டு வதக்கவும். பின்னர் அதனை ஆறவிட்டு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.
விருப்பப்பட்டால், எண்ணெயில் சிறிதளவு கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்க்கலாம். சூப்பரான சட்னி ரெடி.