நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் கருத்துக்கள் ஒரு அரசியல் முதிர்ச்சி உடையவரின் கருத்துக்கள் அல்ல என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சாணக்கியன், ஈழத்து தமிழ் மக்களின் உரிமைகளை பெற்று கொடுக்கக்கூடிய சிந்தனைகளோடு அரசியலுக்கு வந்தவர் அல்ல.
அவர் உண்மையாகவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோடு இணைந்து, கருணா மற்றும் கிழக்கு மாகாணத்தில் அரசு சார்பானவர்களோடு இணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து போட்டியிட்டு தோல்வியுற்றவர்.
அதன் பின்னரான காலப்பகுதியிலேயே அவர் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து கொண்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




















