எம்பிலிப்பிட்டிய கரடமந்திய பிரதேசத்தில் கணவர்,மனைவியை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பலியானவர் 35 வயதான எம்பிலிபிட்டியவைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் கூறினர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று எம்பிலிப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்த நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




















