தனது ஆறு வயது குழந்தையை கரண்டியை கொண்டு சூடு வைத்த பெண் ஒருவரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அயல் வீட்டில் உள்ள பெண் ஒருவர் குழந்தையின் நடத்தையால் அதிருப்தி அடைந்து செய்த முறைப்பாட்டை அடுத்து குழந்தை மீது கோபம் கொண்ட தாய் , கரண்டியை கொண்டு குழந்தையின் உடலில் சூடு வைத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தை கிருலப்பனை பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, குழந்தை தீக்காயங்களுடன் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.