இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தலைமையிலான அரசுக்கு எதிராக ஒரே நாளில் – ஒரே நேரத்தில் 150 போராட்டங்களை நாடு தழுவிய ரீதியில் நடத்துவதற்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஏப்ரல் 07 ஆம் திகதி தேர்தல் தொகுதிகள் வாரியாக இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இப்போராட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்று, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டமும் பேரணியும் கண்டியில் இடம்பெறவுள்ளது.



















