14 வயதான பாடசாலை மாணவனை பலவந்தமாக கடத்திச் சென்று மரம் ஒன்றில் கட்டி வைத்து சிகப்பு எறும்பு மற்றும் உடலில் அரிப்பை ஏற்படுத்தும் செடியின் இலைகளை போட்டதாக கூறப்படும் 17 வயதான இளைஞனை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வீட்டில் இருந்த மாணவனை பலவந்தமாக அழைத்துச் சென்ற சந்தேக நபர்
17 வயதான இந்த சந்தேக நபர் சிலாபம்-பங்கெதெனிய, திகன்வெவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை எதிர்நோக்கி மாணவன் பங்கதெனிய-எலஸ்வத்த பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த போது அங்கு சென்ற சந்தேக நபர் மாணவனை பலவந்தமாக அழைத்துச் சென்றுள்ளார்.
இதன் பின்னர் சந்தேக நபருக்கு சொந்தமான தோட்டம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று மரத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளார்.
அரிப்பை ஏற்படுத்தும் இலையை உடலில் தேய்த சந்தேக நபர்
தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் சந்தேக நபர் தனது உடலில் உடலில் அரிப்பை ஏற்படுத்தும் செடியின் இலை தேய்த்து, சிகப்பு எறும்புகளை விட்டதாக மாணவன் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
சந்தேக நபருக்கு சொந்மானது எனக்கூறப்படும் டீசல் தொகையை அண்மையில் ஒருவர் கொள்ளையிட்டுள்ளார். அந்த டீசல் தொகையை இந்த பாடசாலை மாணவனே திருடியதாக சந்தேகித்து, சந்தேக நபர் மாணவனை தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.