நாமும் நம் வீட்டில் இருப்பவர்களும் சந்தோஷமாகவும் சண்டை சச்சரவு இன்றி வாழ சில பரிகாரங்களை செய்தாலே போதும் எப்போதும் கலகலப்பாக கண்ணீர் இல்லாமல் குடும்பம் இருக்கும் என்று நம்பப்படுகின்றது.
கலகலப்பான குடும்பத்தைப் பெற கல்லுப்பு பரிகாரம்
பொதுவாகவே லட்சுமி கடாட்சம், சந்தோசம் மன நிறைவு என்றால் அந்த இடத்தில் இருக்க வேண்டிய பொருள் கல் உப்பு.
ஆனால் சமீப காலமாக பலர் வீடுகளில் சமையலறையில் இந்த கல்லுப்பு இல்லாமலேயே போய்விட்டது.
எந்த வீட்டில் கல் உப்பு குறையாமல் இருக்கிறதோ அந்த வீட்டில் ஐஸ்வர்யமும் இருக்கும் என்று கூறப்படுகின்றது.
கல் உப்பை எப்படி பயன்படுத்துவது
ஒரு சிறிய கண்ணாடி பீங்கானில் நிரம்பல் உப்பை போட்டு, உப்புக்கு மேலே வட்ட வடிவமாக ஐந்து மிளகுகளை அடுக்கி வைத்து விட வேண்டும்.
இதை வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விட வேண்டும். ஆனால் இந்த உப்பு கீழே கொட்டவும் கூடாது. கண்ணாடி பீங்கானும் உடைய கூடாது.
இதனை தரையில் தான் வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.அலுமாரியின் மேல் பக்கத்தில் கூட யார் கைக்கும் எட்டாமல் வைக்கலாம்.
10 நாட்கள் இந்த உப்பு வீட்டு வரவேற்பறையில் இப்படியே இருக்க வேண்டும்
இதனால் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் உறவுகள் எல்லாம் சந்தோஷமான உறவுகளாக மாறும் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் குறையும், கடன் சுமை குறையும், வீட்டில் இருந்தாலே ஒரு மன நிறைவு ஏற்படும். கண் திருஷ்டி வீட்டில் இருப்பவர்களை எதுவும் செய்யாது.
பத்து நாட்களுக்கு ஒரு முறை இந்த உப்பை தண்ணீரில் கரைத்து விட்டு மீண்டும் அந்த பவுலை கழுவி விட்டு, புது உப்பு மிளகு வைத்து அதே இடத்தில் வைத்து விட வேண்டும்.
அடுத்து சில பேருக்கு பகல் நேரங்களில் எல்லாம் சந்தோஷம் இருந்தாலும், இரவு நேரத்தில் நிம்மதியும் நிம்மதியான தூக்கமும் இருக்காது.
இரவு தூக்கத்தை நிம்மதியாக பெற
ஒரு மஞ்சள் துணியில் ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பை வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் நிறையவே வைத்துக் கொள்ளலாம். இரண்டு கைப்பிடி வைத்தால் கூட தவறில்லை. அதில் 10 மிளகு வைத்து முடிச்சாக கட்டி, தலையணைக்கடியில் வைத்து தூங்க வேண்டும்.
மூன்று நாட்கள் அந்த கல் உப்பு அப்படியே தலையணைக்கடியில் இருக்க வேண்டும். மூன்றாவது நாள் கல் உப்பை முடிச்சோடு கொண்டு போய் ஓடும் தண்ணீரில் போட்டு விட வேண்டும்.
அப்படி இல்லை என்றால் ஒரு பெரிய டப்பில் தண்ணீர் வைத்து முடிச்சோட அந்த கல்லுப்பை தண்ணீரில் போட்டு விட வேண்டும்.இவ்வாறு நெகட்டிவ் எனர்ஜியை அந்த கல்லுப்பு ஈர்த்து வைத்து இருக்கும்.
செய்ய கூடாதவை
அதை திரும்பவும் கையில் தொட கூடாது. வீட்டிலேயே டப்பில் தண்ணீர் ஊற்றி இந்த கல்லுப்பை கரைத்தாலும் கை படாமல் அந்த தண்ணீரை கீழே கொட்டி விட வேண்டும்
மூன்று நாள் கழித்து பின்பு இரவு நல்ல தூக்கம் வருவம் என்று கூறப்படுகிறது.