கொழும்பு – மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கதிரான பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (09) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



















