பராமரிப்பு பணிகள் காரணமாக கடுகண்ணாவை – பிலிமத்தலாவை ரயில் மார்க்கத்தின் 65ஆவது மைல்கல் அருகில் உள்ள ரயில் கடவை 32 மணிநேரம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ரயில் கடவையனது இன்று வெள்ளிக்கிழமை (14) காலை 10 மணி முதல் நாளை சனிக்கிழமை (15) காலை 6 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதனால், வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.



















