பல்லேகலை சர்வதேச பௌத்த பல்கலைக்கழகம் (SIBA) ஏற்பாடு செய்திருந்த நடனக் கச்சேரி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் தாமரைத் தடாகம் கலையரங்கில் புதன்கிழமை (19) நடைபெற்றது.
பல்லேகலை சர்வதேச பௌத்த பல்கலைக்கழகம் தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேலவின் எண்ணக்கருவின் படி, 2016 ஆம் ஆண்டில் சுதேச நடன மரபுகள் எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் நோக்கத்துடன் நிர்மாணிக்கப்பட்டது.
இந்த நடனக் கச்சேரியில் கண்டிய நடனம் மற்றும் சப்ரகமுவ மரபுகளை சேர்ந்த பல நடனங்கள் மற்றும் பல இந்திய நடன அம்சங்களுடன் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நடனம் மற்றும் இசை நிகழ்வுகள் அனைத்தும் பல்லேகலை சர்வதேச பெளத்த பல்கலைக்கழகத்தின் (SIBA) மாணவர்களால் அரங்கேற்றப்பட்டன.
இந்நிகழ்வில், மகா சங்கத்தினர்,முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகள் உட்பட பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டனர்.