ஆனமடுவ நோக்கி பயணித்த லொறி ஒன்று முதுகடுவ பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 10 பேர் காயமடைந்துள்ளனர்ர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாரவில தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் வெசாக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு ஆனமடுவவிற்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட பத்து பேர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.