வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய சந்தேக நபர் ஒருவர், கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு 15இல் வசிக்கும் 41 வயதுடையவர்
கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 150 பேரிடம் இருந்து 150 மில்லியனுக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து ஒரு ஜீப், இரண்டு ஸ்மார்ட் போன்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.




















