பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுமார் 50,000 கிலோகிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினரான சம்பத் மனம்பேரியின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்தியுள்ளது.



















