பேராதனையில் உள்ள புதிய கெட்டம்பே பாலத்திற்கு அருகிலுள்ள மகாவலி கங்கையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பெண் பாலத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை குதித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது,
மேலும் அவர் கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு பை பாலத்தின் மேலே இருந்து கண்டெடுக்கப்பட்டு, அது பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் சேற்றில் புதைந்துள்ளதால், சடலம் நீரில் அடித்துச் செல்லப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



















