சிலாபம் – பொதுமயானத்திற்கருகே வானிலிருந்து மர்மமான மீன் வலையொன்று விழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கடும் மழை பெய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே 250 அடி நீளமும் 300 கிலோ நிறையும் கொண்ட இந்த வலை வானிலிருந்து விழுந்துள்ளது. இக் காட்சியை பலரும் அவதானித்துள்ளனர்.
இதனை பார்த்த பலரும் வலையை கொண்டு செல்ல முயற்சித்த போதிலும், நகர சபையின் பாதுகாவலர் அதற்கு இடமளிக்காமல் சபையின் தலைவருக்கு அறிவித்துள்ளார். இந்த வலையில், முடிச்சுகள் இல்லாதது மற்றும் கிழிந்தவுடன் மீண்டும் தைக்க இயலாது என குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் இது இலங்கை மீனவர்கள் பயன்படுத்தாத வலை என நகர சபை தலைவர் தெரிவித்துள்ளார்.
நைலோன் நூலினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வலை சீனா, தாய்வான் அல்லது இந்தியாவிற்கு சொந்தமானதாக இருக்கக் கூடுமென அவர் கூறியுள்ளார்.
இதனை பார்ப்பதற்காக பாரியளவிலான மக்கள் அவ்விடத்தில் கூடியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.