கொரோனா தொற்றினால் மேலும் 7 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் மரணித்தவர்களின் எண்ணிக்கை 323 ஆக உயர்ந்துள்ளது. மரணங்களின் விபரம் வருமாறு-
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த, 75 வயதான பெண் ஒருவர், கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (31) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியாவுடன் சிறுநீரக நோய் மற்றும் குருதி விஷமடைவினால் ஏற்பட்ட அதிர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர், மஹரமக புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (01) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் புற்றுநோய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 02 (கொம்பனித்தெரு/ யூனியன் பிளேஸ்) பிரதேசத்தைச் சேர்ந்த, 72 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்றுமுன்தினம் (31) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் நெஞ்சில் ஏற்பட்ட தொற்றுடன் ஏற்பட்ட உக்கிர நுரையீரல் தொற்று மற்றும் இருதய நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த, 69 வயதான ஆண் ஒருவர், கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (01) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான ஆண் ஒருவர், தனது வீட்டில் வைத்து மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்றுமுன்தினம் (31) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவுடன் ஏற்பட்ட அவையவங்கள் செயலிழப்பு, கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட புரொங்கோநிமோனியா (Bronchopneumonia) மற்றும் சிறுநீரக தொற்று நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மடவளை பிரதேசத்தைச் சேர்ந்த, 73 வயதான பெண் ஒருவர், தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (01) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் இருதய செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
கெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த, 77 வயதான ஆண் ஒருவர், பேராதெனிய போதனா வைத்தியசாலையில் இருந்து தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (01) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியாவுடன் ஏற்பட்ட குருதி விஷமடைவு, உக்கிர நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.