மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் ஒரு கோடி ரூபா சந்தைப்பெறுமதிக் கொண்ட ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் மீட்பின்போது மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு பெரும்பாலும் போதைப்பொருட்கள் கடல் வழியாகவே கடத்தி வரப்படுகின்றன.
இதன்படி நாள் தோறும் போதைப்பொருட்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்படுவதும், அது தொடர்பானவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது.
வடக்குகிழக்கு மற்றும் தென்பகுதி கடற் பிரதேசங்களிலேயே போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சம்பவங்கள் பெருமளவில் பதிவாகி வருகின்றன