மறைந்த இரண்டாம் எலிசெப் மகாராணியின் இறுதி கிரியையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றிருந்தார். இந்நிலையில் அவர் பிரித்தானிய மன்னர் சார்லஸ் உடன் கலந்துரையாடியதாக கூறப்படுகின்றது.
இந்த சந்திப்பு பக்கிங்ஹாம் அரண்மனையில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆம் திகதி பிரித்தானிய அரசியார் உயிரிழந்த நிலையில் நேற்றையதினம் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தது.
அரசியாரின் இறுதி நிகழ்வில் உலக தலைவர்கள் பலரும் கலந்துகொண்டிருந்த நிலையில் , இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவும் ராணியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள பிரித்தானியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.