இந்திய மாநிலம் கேரளாவில் இளைஞர் ஒருவர் குளிர்காய ரப்பர் தோட்டம் ஒன்றை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் வட மாநில இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தன்று கடும் குளிரில் சிக்கிய வட மாநில இளைஞர் ஒருவர் குளிர்காய முடிவு செய்து ரப்பர் தோட்டத்தில் சருகுகளை குவித்து தீ மூட்டியுள்ளார்.
ஆனால் அந்த தீ திடீரென்று ரப்பர் மரங்களில் படர்ந்துள்ளது. இதை கண்டுகொள்ளாமல் அந்த இளைஞர் குளிர்காய்ந்துள்ளார்.
இதனிடையே ரப்பர் தோட்டம் கொழுந்துவிட்டெரிவதை காண நேர்ந்த பொதுமக்களும், அந்த தோட்ட உரிமையாளரும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்துவிட்டு சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ரப்பர் தோட்டத்திற்கு நெருப்பு வைத்ததன் பேரில் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.