கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொல்கஹவெல ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது 18 வயதுடைய பம்பரகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் குருணாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொல்கஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.