உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொடிய கொரோனா வைரஸிற்கு எதிராக போராடுவதற்கு அமெரிக்கா, 1.3 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
ஆய்வுகூட வசதிகளை மேம்படுத்துதல், தொற்றுக்குள்ளானவர்களை இனங்காணுதல், அடையாளம் காணப்பட்டவர்களை கண்காணித்தல், தொழில்நுட்ப அதிகாரிகளின் உதவியை பெற்றுக்கொள்ளுதல் ஆகிய செயற்பாடுகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை அமெரிக்காவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.