வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மண்டூர் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மண்டூர் கோட்டைமுனை கிராம உத்தியோகஸ்தர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மனைவியை பரிந்து தனியாக பல காலமாக ராஜா வேல்ட்டின் என்று அழைக்கப்படும் குறித்த நபர் வாழ்ந்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
மேலும் இவருக்கு மூன்று பிள்ளைகளின் இருந்துள்ளது. இதேவேளை குறித்த நபர் இன்று அவரது மனைவி தங்கிருக்கும் இடத்திற்கு சென்று அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரனையை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.