கிளிநொச்சியில் புகையிரதத்துடன் மோதி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில், இரணைமடு சந்திக்கு அருகில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் அறிவியல் நகரை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பலியான இளைஞர் காலொன்றை இழந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


















