திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டென்மார்க் நாட்டு பெண் சுற்றுலா பயணியொருவரின் கையைப்பிடித்த நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
திருகோணமலையில் உள்ள ஹோட்டலோன்றில் குறித்த சுற்றுலா யுவதி தங்கியிருந்த நிலையிலே சந்தேக நபர் குறித்த யுவதியின் கையை பாலியல் ரீதியில் பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து சந்தேக நபர் தொடர்பாக சுற்றுலா பயணியான டென்மார்க் யுவதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
இதனையடுத்து குறித்த சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதுடன் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.