இந்தியாவில் காதலனுடன் சேர்ந்து மனைவி கணவனை கொலை செய்துவிட்டு வேறு இரண்டு ஆண்கள் மீது புகார் கொடுத்த சம்பவம் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தின் Firozabad மாவட்டத்தில் உள்ள Sirsaganj காவல்நிலையக்குட்பட்ட பகுதியில் இருக்கும் Sothara கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுன் சிங். இவருக்கு மோகினி என்ற மனைவி உள்ளார்.
கணவர் மிகவும் குடிகாரன் என்பதால், மோகினி அவர் மீது வெறுப்பில் இருந்துள்ளார். அப்போது தான் அப்பகுதியை சேர்ந்த சுர்ஜித் என்பவருடன் மோகினிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளது. சுமார் ஓராண்டிற்கு மேலாக இருவரும் தனிமையில் சந்திப்பது, என சந்தோஷமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தான் சில தினங்களுக்கு முன்பு அர்ஜுன் சிங் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். அப்போது மோகினின் தன் கணவரின் மரணத்திற்கு காரணம் என்று கூறி இரண்டு பேர் மீது புகார் கொடுத்தார்.
இருப்பினும் பொலிசாருக்கு மோகின் மீது சந்தேகம் ஏற்பட, கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது மோகினி கணவனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
பொலிசாரிடம், தானும், சுர்ஜித்தும் கணவரின் கழுத்தை நெரித்து கொன்றதாகவும், அதன் பின் அவரின் உடலை வேறொரு இடத்தில் வீசிவிட்டு, வேறொரு நபர்கள் மீது புகார் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இரண்டு பேரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.



















