கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றும் மற்றொரு ஆலோசகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி, லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மகியங்கனையைச் சேர்ந்தவருக்கே இவ்வாறு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனையடுத்து அவர் பழகிய 70 சிறுவர்கள் உள்பட 300 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.


















