மட்டக்களப்பு – பாசிக்குடா பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவன் நேற்று மாலை அவரது நண்பர்கள் இருவருடன் பாசிக்குடா – கல்மலை கடற்பகுதியில் நீராடிய நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை- செம்மன் ஓடை, 4 பிரிவு ஹிஸ்புல்லா வீதியைச் சேர்ந்த, 17 வயதான, முகமட் றிஸ்வி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.