யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் இன்று அதிகாலை 4 மணியளவில் வாள்வெட்டு சம்பவம் நடந்தது.
யாழிலிருந்து வெளியாகும் வலம்புரி பத்திரிகையின் பணியாளர் ஒருவர், பத்திரிக பணி முடிந்ததும் அதிகாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் ரௌடிகள் திருடிச் சென்றுள்ளனர்.


















