மட்டக்களப்பு- கொடுவாமடு வயற்பிரதேசத்தில் வாடியொன்றினை காட்டு யானைகள் துவம்சம் செய்துள்ள சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
வயல் வாடி காவலாளி சம்பவ நேரம் தங்கியிருக்காததனால் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.
நெல் வேளாண்மைச் செய்கைக்காக தற்போது நிலம் உழுதல் நடவடிக்கைகள் நடைபெறும் நிலையில் விதைநெல் மூடைகளை உண்பதற்காக இந்த யானைகள் வந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
வாடியில் உணவுப்பண்டங்கள் எதுவும் இல்லாததனால் வாடியை துவம்சம் செய்துவிட்டு சென்றுள்ளன.