• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

தலைவரின் மகன் தொடர்பான பொன்சேகாவின் கருத்துக்கு விடுதலைப்புலிகள் பதிலடி!

Editor by Editor
October 8, 2020
in இலங்கைச் செய்திகள்
0
தலைவரின் மகன் தொடர்பான பொன்சேகாவின் கருத்துக்கு விடுதலைப்புலிகள் பதிலடி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

“இலங்கையில் தமிழர்கள் ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில், தமிழர்களை பாதுகாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு” என ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் போராளியுமான துளசி தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

பல்வேறு கட்டமைப்புகளையும், பல்வேறு படையணிகளையும் கொண்ட அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு காணப்பட்டது.

“எந்தவொரு கால கட்டத்திலும் சிறுவர் போராளிகளையோ சிறுவர் படையணிகளையோ தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டிருக்கவில்லை” என கூறிய அவர், தமது அமைப்பில் சுய விருப்பத்தின் பேரில் இணைந்துகொண்ட 18 வயதிற்கு குறைவானோரை சர்வதேச இராணுவ சட்டங்களுக்கு அமைய விடுதலைப் புலிகள் தமது வீடுகளுக்கு அனுப்பி வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.

அதற்கு முன்னரான காலத்திலும் சிறுவர் போராளிகளை யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தவில்லை

இவ்வாறான நிலையில், பிரபாகரன் பாலச்சந்திரன் என்ற சிறுவன், படையணிகளுக்கு பொறுப்பாக போராளியாக இருந்தார் என முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறுவர்கள் மீது மேற்கொண்ட இனப்படுகொலையிலிருந்து தங்களை புனிதவான்கள் என்று காட்டிக்கொள்வதற்காக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரபாகரனின் குடும்பத்திலுள்ள ஏனையோரும் ஒவ்வொரு படையணிகளுக்கு பொறுப்பாக இருந்துள்ளனர் என சரத் பொன்சேகா முன்வைத்த குற்றச்சாட்டு குறித்தும் க. துளசியிடம் பிபிசி தமிழ் வினவியது.

அப்போது அவர், வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது மூத்த மகன் சார்ள்ஸ் அன்டனி ஆகியோருக்கு இடையில் நிகழ்ந்த கதையொன்றை நினைவூட்டினார்.

சார்ள்ஸ் அன்டனி, சிறுவனாக இருந்த போது, தனது தந்தையான வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் சென்று, ‘அப்பா நான் வரி உடுப்ப போட்டு பார்க்க போறேன்” என்று கேட்டதாகவும், அதற்கு பிரபாகரன், ‘தமிழீழத்தில் எல்லா இடத்திலும் பயிற்சி முகாம்கள் இருக்கு. நீ எங்கயாவது போய் பயிற்சி எடுத்து போட்டு, வரி உடுப்ப போட்டு படம் எடுக்குறதுல எனக்கு பிரச்சினை இல்ல” என பதிலளித்ததாக துளசி கூறினார்.

இதேபோல, சார்ள்ஸ் அன்டனி 18 வயதை அடைந்ததன் பின்னர், பயிற்சி முகாமில் இணைந்து பயிற்சிகளை பெற்றதையும் துளசி நினைவுகூர்ந்தார்.

அதன்பின்னர் சார்ள்ஸ் அன்டனி ஒரு சாதாரண போராளியாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டு, அதிலிருந்து படிப்படியாக முன்னேறி புலிகள் அமைப்பின் சிறு பிரிவாக செயற்பட்ட கணனி பிரிவிற்கு பொறுப்பாக வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட ஆளணிப் பற்றாக்குறையினால், பிரபாகரனின் மகளான துவாரகா, விடுதலைப் புலிகள் அமைப்பின் சாதாரண போராளியாக தனது மண்ணிற்கு தனது கடமையை நிறைவேற்றினார் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 18 வயதுக்கு குறைவானோர் இருக்கவில்லை எனவும், போர் குற்றச்சாட்டுக்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக ஒரு சிறுவனை போராளியாக்கி, ஒரு படையணிக்கு தளபதியாக்கியிருப்பது வேதனையான விடயமாகவே தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பிரபாகரனின் மனைவி, விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருந்ததாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியிருந்தமை குறித்தும், க.துளசி பிபிசி தமிழிடம் விவரித்தார்.

‘அண்ணி வந்து வீட்டுல பிள்ளைகள வளர்க்கும் ஒரு சாதாரண குடும்ப பெண்மணியாகவே இருந்தார்” என அவர் கூறினார்.

சர்வதேசத்திற்கு முன்பாக இவ்வாறான போலி குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் விடுத்தமையினாலேயே, விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சர்வதேசத்தில் தடை விதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள தருணத்தில், யுத்தத்தினால் உயர்நீத்தவர்களை நினைவுக்கூர்வதற்கு தடை விதிக்கும் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் வாழ்வதற்கு தயாராக இருக்கின்றார்கள் எனவும், இதனை கருத்திற் கொண்டு அரசாங்கம் நியாயமான விடயங்களை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

வன்னி மக்களுக்கு பிரதமர் மஹிந்த வழங்கியுள்ள உறுதிமொழி..!!

Next Post

ஊரடங்கு உத்தரவை மீறிய 80 பேர் கைது!

Editor

Editor

Related Posts

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு
இலங்கைச் செய்திகள்

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு
இலங்கைச் செய்திகள்

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025
மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

December 6, 2025
அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

December 6, 2025
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு…! ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
இலங்கைச் செய்திகள்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு…! ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

December 6, 2025
அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி
இலங்கைச் செய்திகள்

அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி

December 5, 2025
Next Post
ஊரடங்கு உத்தரவை மீறிய 80 பேர் கைது!

ஊரடங்கு உத்தரவை மீறிய 80 பேர் கைது!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025
மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

December 6, 2025
அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

December 6, 2025

Recent News

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025
மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

December 6, 2025
அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

December 6, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy