மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்த கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த தாதி ஒருவருக்கும் அவரது 10 மாத குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாதி கடந்த 4 ஆம் திகதி சொந்த ஊரான கம்பஹா மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அதனையடுத்து 9 ஆம் திகதி தாதியும் அவரது குழந்தையும் சுகயீனமடைந்த நிலையில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது .
இதனையடுத்து அவருடன் பழகிய மற்றைய நண்பர்கள் அவருடன் இருந்தவர்கள் அவர் சென்ற இடங்கள் போன்றவற்றை தற்போது பாதுகாப்பான முறையில் சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாதி கடமையாற்றிய ஒரு பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அத்துடன், அங்கு கடமையாற்றிய தாதியர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
இதனால் மக்கள் தேவையில்லாமல் பதற்றப்பட தேவையில்லை எனவும் முகக்கவசம் அணியுமாறும், சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும், பொது மக்கள் தேவையில்லாமல் வைத்தியசாலைக்கு செல்லவேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.