தற்போது இலங்கையில் தங்கியுள்ள வௌிநாட்டவர்களின் அனைத்து வித வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடிகயல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
உலகளவில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரையில் குறித்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.