திருகோணமலையில் விமானப்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சீனத்துறைமுக விமானப் படை முகாமிலுள்ள 3 மாடிக் கட்டிடத்திலிருந்து இவர் நேற்று இரவில் விழுந்து உயிரிழந்திருப்பதாக விமானப்படையின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
மேலும் சிப்பாய் உயிரிழந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சீனத்துறைமுக பொலிஸார் நடத்திவருகின்றனர்.